"மைக்ரோகிரீன்ஸ்" என்னும் ஆரோக்கிய உணவு பற்றிய கருத்தரங்கு

கோயம்புத்தூர், அக்டோபர் 15 ம் தேதி சனிக்கிழமை அன்று ஆர்.எஸ் புரத்தில் உள்ள ராஜஸ்தானி சங்கத்தில் மைக்ரோகிரீன்ஸ் என்ற ஆரோக்கிய விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி கோவையில் முதல் முறையாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைவரையும் டாக்டர்.ருச்சி வரவேற்றார்.  

பின்னர், இது குறித்து அவர் பேசுகையில்: மைக்ரோகிரீன்ஸ் என்பது ஒரு அதிசய உணவு, இது சக்தி வாய்ந்தது மற்றும் சுவையானது. மைக்ரோகிரீன்ஸ் உணவு என்பது நாம் அன்றாட சாப்பிடும் உணவில் உள்ளது. அதாவது, முளைப்பயிர் மற்றும் பல்வேறு தாவர வகைகளில் உள்ள உணவுப் பொருட்கள் சிறு வயதிலேயே அறுவடை செய்வது மூலமாக நமக்கு அதில் இருந்து 4 முதல் 40 மடங்கு வரை அதிக உயர் சத்துக்கள் கிடைக்கின்றன. இவ்வகை சத்துக்கள் பொதுவாக வளர்ந்த பெரிய தாவரங்களில் அதாவது; தக்காளி, கத்தரி போன்ற பல்வேறு பெரிய கனிகளில் இச்சத்துக்கள் கிடைப்பது இல்லை. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த சத்துப்பொருட்கள் புற்றுநோயை வராமலும் தடுக்கிறது. என அவர் பேசினார்.




இதனை சித்ரா கிருஷ்ணசாமி, அனு மற்றும் ஸ்வேதா கிருஷ்ணன் ஆகியோர் இந்நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தனர். இதில் 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...